News October 16, 2024

விருதுநகர்:குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை

image

பன்றிகளை வளர்க்க விரும்புவர்கள் அதற்கென தகுந்த இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். பன்றிகளை வீட்டிலேயே வளர்த்தாலோ, குறிப்பாக சுகாதார முறைப்படி பராமரிக்காத இடத்தில் வளர்த்தாலோ மனிதர்களுக்கு கடுமையான நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 21, 2025

ஆண்டாள் கோயிலில் ஒன்றாக காட்சியளித்த தெய்வங்கள்

image

ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு 3 முறை அதாவது தீபாவளி பண்டிகை, கௌசிக ஏகாதசி மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ஆழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள்,ரங்கமன்னார் கருடாழ்வார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர்.

News October 20, 2025

விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

image

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <>க்ளிக் செய்யுங்க<<>>.. மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.

News October 20, 2025

விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

image

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!