News November 24, 2025
விருதுநகர்:கம்மியான பள்ளியில் பைக்,கார் வேண்டுமா..

விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி கடத்தலில் சிக்கியவர்கள் மீது வழக்கு பதிந்தனர். இதில் 7 இருசக்கர வாகனங்கள், 13 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அலுவலகத்தில் நவ.25 அன்று ஏலம் விடப்பட உள்ளது.SHARE பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
விருதுநகருக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
விருதுநகர்: குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
JUST IN விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார் என விருதுநகர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


