News June 14, 2024
விருதுநகரில் 114 கடைகளுக்கு சீல் வைப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க 4000 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News March 1, 2026
விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News March 1, 2026
ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
ராஜபாளையம்: வீட்டின் பூட்டை உடைத்து 70கி நகை திருட்டு

ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவர் குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்ற நிலையில் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


