News June 14, 2024

விருதுநகரில் 114 கடைகளுக்கு சீல் வைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க 4000 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News October 13, 2025

விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

image

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து அக்.14க்குள் (நாளை) ஆன்லைனில் மூலம் விண்ணப்பிங்கலாம். இதற்கு தேர்வு இல்லை. உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News October 13, 2025

விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 13, 2025

ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

image

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!