News April 4, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் உள்ள பிரபல ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியில் 100 டெய்லர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
Similar News
News April 10, 2025
விருதுநகர் எழுத்தாளருக்கு விருது

பாரதிய பாஷா விருது என்பது இந்திய இலக்கியத்திற்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருது. மேலும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். தற்போது இந்த விருதானது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நாளை திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக ஏப்.3 அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வீதி உலா வந்து வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து நாளை காலை 7.5 க்குசெப்பு தேரோட்டமும், மாலை 6.30 முதல் 7.30 க்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
News April 10, 2025
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் மாலை 4 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.