News March 1, 2025
விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

விருதுநகா், மத்திய சேனையைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளிகளான வெள்ளையன், மகேஸ்வரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இதில் பிரவீன்(5) நேற்று மாலை விளையாட சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தேடிய போது, மற்றொரு வீட்டு தகரக் கொட்டகையின் மேலே செல்லும் மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்தாா். இதையடுத்து, ஆமத்தூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
Similar News
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
சிவகாசி அருகே இளம்பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது

சிவகாசி அருகே ரிசர்வ்லையன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்-கவிதா (30)தம்பதி. கருத்து வேறுபாட்டால் கவிதாவை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதால் சேகர்(33) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சேகர் குடித்துவிட்டு கவிதாவை தாக்கினார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதால் கவிதாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டினார்.


