News March 30, 2025

விருதுநகரில் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி, கையுந்து போட்டி

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்.9,10 அன்று பெண்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற உள்ளது. கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9488151214, 9994511966, 9865071770 என்ற எண்ணிலும் கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9994160149, 9894693210 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1.20 லட்சம் வழங்கப்படும்.

Similar News

News November 1, 2025

புதிய ரவுண்டானவால் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

image

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் Gh நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 1, 2025

பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

image

மகளிர் சுய உதவிக் குழுவில் 2 வருடங்கள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18- 55 வயதுடைய அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலம் 2% வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ.4 முதல் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் நவ.11 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!