News May 14, 2024
விருதுநகரில் பெண் சடலமாக மீட்பு

தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 23, 2025
விருதுநகர்: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 23, 2025
விருதுநகர் மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1985
▶️ மக்கள் தொகை: 19.43,309 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 7
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 16,09,224
▶️ இந்தியாவின் 70% பட்டாசு உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது.
▶️ இந்தியாவின் மொத்த டைரிகளில் 30% உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 23, 2025
விருதுநகரில் பயிர் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்