News October 18, 2025

விருதுநகரில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு!

image

விருதுநகர் மாவட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. இதனை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

image

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்‌.

News October 18, 2025

விருதுநகர்: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

image

விருதுநகர் மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும், கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையென்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குபவர்களும் இத சரிபார்த்து வாங்குங்க.. SHARE பண்ணுங்க.

News October 18, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும், இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!