News October 19, 2025

விருதுநகரில் பட்டபகலில் மிளகாய் பொடி துாவி திருட முயற்சி

image

விருதுநகர் TKC பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் 56. இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்து கொடுக்கும் பட்டறை வைத்துள்ளார். முத்தால் நகரைச் சேர்ந்த பட்டுராஜா தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார்.நகைகள் வாங்க வேறு கடைக்கு செல்லுமாறு கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி கையில் இருந்த தங்க நகையை திருட முயன்று அலைபேசியை மட்டும் திருடிச்சென்றார். போலீசார் பட்டுராஜாவை கைது செய்தனர்.

Similar News

News April 7, 2026

BREAKING சாத்தூர்: நயினார் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

விருதுநகர்: சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

image

விருதுநகர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News April 7, 2026

ராஜபாளையம்: கோவிலில் நகை திருட்டு; CCTV யில் சிக்கிய திருடன்

image

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!