News November 24, 2024
விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*
Similar News
News December 6, 2025
செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி சுலோச்சனா(65) உடன் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் டவுன் போலீசார் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிகுமார்(19) என்ற இளைஞரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்
News December 6, 2025
ஸ்ரீவி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவி.,அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் தனது உறவினரான 15 வயது சிறுமியை குடும்ப பிரச்சினை குறித்து பேச வேண்டும் என தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த புகாரில் 2022-ம் ஆண்டு ஸ்ரீவி அனைத்து மகளிர் போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி நவீன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
EXCLUSIVE விருதுநகரில் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் ஏற்பட்ட 6246 விபத்துகளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இனி மது அருந்தி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து, குற்றவியல் வழக்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி 1.5.2025 – 31.8.2025 வரை மது அருந்தி வாகனம் ஓட்டிய 117 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது.


