News August 28, 2024
விருதுநகரில் நாளை விளையாட்டு போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேஜர் தயான்சந்த் பிறந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நாளை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
விருதுநகரில் பட்டபகலில் மிளகாய் பொடி துாவி திருட முயற்சி

விருதுநகர் TKC பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் 56. இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்து கொடுக்கும் பட்டறை வைத்துள்ளார். முத்தால் நகரைச் சேர்ந்த பட்டுராஜா தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார்.நகைகள் வாங்க வேறு கடைக்கு செல்லுமாறு கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி கையில் இருந்த தங்க நகையை திருட முயன்று அலைபேசியை மட்டும் திருடிச்சென்றார். போலீசார் பட்டுராஜாவை கைது செய்தனர்.
News October 19, 2025
வத்திராயிருப்பு அருகே மூதாட்டி தீக்குளிப்பு.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த அக்.14 ஆம் தேதி மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்து உடலில் கற்பூரத்தை தடவி தீ வைத்து காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.