News March 16, 2026

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க எண் வெளியீடு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

Similar News

News March 29, 2026

சிவகாசி: யார் இந்த தவெக வேட்பாளர் கீர்த்தனா

image

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்தனா விருதுநகரை பூர்வீகமாக கொண்டவர். பிரசாந்த் கிஷோரின் i-pac உள்ளிட்ட முன்னணி அரசியல் ஆலோசனை நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய இவர் விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கடந்த 3 மாதம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்தவுடன் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

News March 29, 2026

கவனம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர்; புதிய அறிவிப்பு!

image

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவின் கூட்டணி கட்சியான CPI களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.

News March 29, 2026

சிவகாசி தொகுதியில் பிரபல நடிகர் போட்டியா?

image

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ள சசிகலாவை நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து அவரது தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!