News December 21, 2025

விருதுநகரில் திமுக மாநாடு அறிவிப்பு

image

தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் ஜன.24 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்ய உள்ளார். ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு போட்டியாக இந்த மாநாடு அமையும் என திமுக வினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 21, 2025

விருதுநகர்: 12th முடித்தால் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன. 9க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News December 21, 2025

விருதுநகர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 21, 2025

விருதுநகர் அருகே காதலி வீட்டில் இளைஞர் தற்கொலை!

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் தங்கபாண்டி (30). திருமணமாகாத இவர், தனது உறவினரான சிவகாசி கங்காகுளத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி அப்பெண்ணின் வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!