News July 9, 2025

விருதுநகரில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News July 9, 2025

சாத்தூரில் மதிமுக செயற்குழு கூட்டம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க., சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தனியார் திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைகோ மற்றும் மதிமுக கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட ஏராளமான மதிமுக நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நிர்வாகிகள். மாவட்ட செயலாளர் கலந்து கொள்ள உள்ளனர்.

News July 9, 2025

சாத்தூர்: பட்டாசு தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை

image

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சங்கர்(24). காதல் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை இவரை ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ஓட ஓட வெட்டியத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி(23), ராஜபாண்டி(24), அபி(25) ஆகியோரை கைது செய்து மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News July 9, 2025

பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்யலாம் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கான காப்பீட்டை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

error: Content is protected !!