News April 12, 2025

விருதுநகரில் இலவச நீட் பயிற்சி

image

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 படித்த 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச நீட் மற்றும் கியூட் நுழைவு பயிற்சி ஏப்.30 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முழு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 13, 2025

விருதுநகர் : 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தையல் பணியாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் <<>>செய்து 31-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 13, 2025

ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்

image

பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பொது மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபோன்று ரேஷன் அரிசி, பொருட்கள் கடத்தல் குறித்து, பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News April 12, 2025

விருதுநகரில் 112 பேர் அதிரடி கைது

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!