News April 4, 2025

விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 10, 2025

விருதுநகர் எழுத்தாளருக்கு விருது

image

பாரதிய பாஷா விருது என்பது இந்திய இலக்கியத்திற்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருது. மேலும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். தற்போது இந்த விருதானது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நாளை திருக்கல்யாணம்

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக ஏப்.3 அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வீதி உலா வந்து வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து நாளை காலை 7.5 க்குசெப்பு தேரோட்டமும், மாலை 6.30 முதல் 7.30 க்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 10, 2025

சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் மாலை 4 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

error: Content is protected !!