News September 8, 2025

விருதுநகரில் அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ச்சி

image

விருதுநகர் அருகே குள்லூர்சந்தை பகுதியில் நேற்று இளைஞர் நாகராஜ் என்பவர் முன்விரோதம் காரணமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வீசப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக சகோதரர் மகனை தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 2 கொலைகள் நடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News September 8, 2025

விருதுநகர்: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

விருதுநகரில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இதை SHARE பண்ணுங்க.

News September 8, 2025

விருதுநகரில் அரிவாளால் வெட்டிக் கொலை

image

விருதுநகர் அடுத்த குல்லூர்சந்தை அருகே மெட்டுக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி(22) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமி அரிவாளால் நாகராஜனை வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!