News August 11, 2024
விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த 34 நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெரு நாய்கள் விமான பயணிகள், போலீசார், ஊழியர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் விமான நிலையங்களை சுற்றித்திரிந்த 34 நாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தினர்.
Similar News
News January 20, 2026
சென்னையில் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

சென்னை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 94458 50829 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். *இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க*
News January 20, 2026
சென்னை: 24ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன-20) வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். பின் வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்.
News January 20, 2026
சென்னையில் சிறப்பு முகாம்- DON’T MISS

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்ய ஜன.18ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும் வரும் 24, 25ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


