News October 19, 2024
விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கியது

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு, பயணிகளை வேறு வழியாக அனுப்பி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைவது, தொடர்ந்து வருவதால் பரபரப்பு உள்ளது.
Similar News
News July 9, 2025
தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News July 9, 2025
திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வரும் நேரம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. அதன்படி, ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை (ஜூலை 10, 2025) அதிகாலை 2:30 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11, 2025 அதிகாலை 3:15 மணி வரை பக்தர்கள் வலம் வர உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் கிரிவலம் வந்து இறைவனின் அருளைப் பெறலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!
News July 9, 2025
காவல் உதவி செயலின் வசதி மற்றும் முக்கியத்துவம்

செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.