News March 18, 2025
விமான நிலையத்தில் அதிகரித்திருக்கும் நாய் தொல்லை

சென்னை விமான நிலையத்தில் நாய் தொல்லை அதிகரித்திருப்பதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் நாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதால் அச்சமாக உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு புளூ கிராஸ், விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
Similar News
News March 18, 2025
மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 18, 2025
சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடாது

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஆட்டோ சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 1.5 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் மார்ச் 19ஆம் தேதி தொழிற்சங்கம் போராட்டத்தை அறிவித்தது.
News March 18, 2025
சென்னையில் கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் வாகன நிறுத்த தேவையை அறிந்து மேலாண்மை செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் கார்களை வாங்கும் போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.