News August 13, 2025
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கோவில் நகரமான குடந்தையில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற விழாவான மகாமகம் திருவிழா 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு தேவையான முன்னேறுபாடுகள் பற்றி இன்று (ஆகஸ்ட் 13) கும்பகோணம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை கலெக்டர். பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
News August 13, 2025
தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரி வேண்டுகோள்

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் மின்விபத்தினை தவிர்க்க பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார்களை செல்போன் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.(மாநில அளவில்) 94987 94987, தஞ்சாவூர் வாட்ஸ் ஆப் எண் 94984 86899, மின்தடை புகார் மையம் 94984 86901, உதவி என்ஜினீயர்,மின் தடை புகார்-94984 86900. எண்ணுக்கு