News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
குற்றாலத்தில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி பாஜக தெற்கு ஒன்றியம் சார்பில் குற்றாலம் திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அதைத்தொடர்ந்து குற்றாலம் கோவில் அன்னதான கூடத்தில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று குற்றாலம் திருமுருகன் கேட்டுக்கொண்டார்.
News September 15, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் 530 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது.