News April 6, 2025

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

image

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News August 24, 2025

திருவள்ளூர்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04427661230) தொடர்பு கொள்ளுங்க.

News August 24, 2025

தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தனியார் பேருந்தில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

News August 24, 2025

திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!