News April 6, 2025
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 7, 2025
கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

பூந்தமல்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்குமார் (15). இவர், கடந்த 3ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக பைக்கில் சென்றபோது, குன்றத்தூர் அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியது. இதில், ரோகித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த 9 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 6) சிகிச்சை பலனின்றி ரோகித்குமார் உயிரிழந்தார்.
News April 6, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 369 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பெண்கள் <
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <