News April 24, 2025
விபத்தில் காயம் அடைந்த காவலர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே மோர்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காவலர் இளங்கோ நீதிமன்ற பணி முடித்து திரும்புகையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 8, 2025
நாமக்கல்லில் அதிரடி 54 பேர் லைசென்ஸ் தடை

நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் இணைந்து மாதாந்திர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 840 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 242 வாகனங்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டன. ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 54 பேரின் லைசென்ஸ் தடைசெய்யப்பட்டது. மேலும் ₹7,86,500 அபராதம் விதிக்கப்பட்டு ₹62,300 வசூலிக்கப்படது.
News November 8, 2025
நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
நாமக்கல் மக்களே மிக முக்கியம் பாருங்க!

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <


