News April 12, 2025
விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1.14கோடி நஷ்ட ஈடு

தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர் நான்காம் கேட் அருகே டூவிலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரி கார் உரிமையாளர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் மீது துரைசிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரருக்கு ரூ.1,14,06,486 நஷ்ட தொகை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
அஞ்சல்தலை சேகரிப்பு போட்டி அறிவிப்பு – ரூ.6000 உதவித்தொகை

மாணவர்களில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டம் செயல்படுத்துகிறது. இதற்கான போட்டி கோவில்பட்டியில் நடைபெறும் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பங்களை செப்.1க்குள் மதுரை தபால் துறைக்கு அனுப்ப வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.
News August 22, 2025
தூத்துக்குடி: ரூ.1.31,500 சம்பளத்தில் கோர்ட்டில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
News August 22, 2025
தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது. எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 29ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனா்.