News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.
Similar News
News November 10, 2025
Sports Roundup: 6 ரன்களில் அவுட் ஆன ஜெமிமா

*உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். *ஆஸி., மகளிர் பிக்பாஷ் கிரிக்கெட்டில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 ரன்களில் அவுட் ஆனார். *ஆஸி., நடைபெறும் ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஃபைனலில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன் தோல்வியை தழுவினார். *‘பிடே’ உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
News November 10, 2025
BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி 47 மீனவர்களை செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 1/2

★முதலில் <


