News August 25, 2024
விநாயகர் சதுர்த்தி வழிமுறைகள் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு வழிமுறைகள், கரைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறையின்படி சிலைகளை கரைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
News October 18, 2025
BREAKING அருப்புக்கோட்டையில் தீபாவளியால் விலை உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று (அக்.18) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதில் மல்லிகை ரூ.1,800 , கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,500, பிச்சி ரூ.1,000 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ ரூ.200, மிட்டாய் ரோஸ் கிலோ ரூ.150, மரிக்கொழுந்து ரூ.100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
News October 18, 2025
திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.