News September 14, 2024

விதிமீறிய 1,000 வாகனங்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

image

தாம்பரம் அடுத்த திருநீர்மலை, குரோம்பேட்டை, மெப்ஸ், தாம்பரம் இந்துமிஷன் சந்திப்பு, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய இடங்களில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 1,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

செங்கல்பட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
1. தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா பள்ளி
2. திருப்போரூர் – எப்.பி.சி திருமண மண்டபம்
3. பரங்கி மலை – டபேலா ஹால்
4. காட்டாங்குளத்தூர் – எஸ்.எச்.ஜி கட்டடம்
5. சித்தாமூர் – தாத்தா ரெட்டைமலை சீனிவாச திருமண மண்டபம்
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்

News September 18, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தாம்பரம் மாநகராட்சி, திருப்போரூர், புனித தோமையார் மலை நகர்புற பஞ்சாயத்து, சித்தாமூர் மதுராந்தகம் காட்டாங்குளத்தூர் டு திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்-18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப குறை மற்றும் கோரிக்கை கொடுக்கலாம். அதிகாரிகள் விரைந்து செயல்படுவார்கள்.

News September 18, 2025

கிளாம்பாக்கம்: 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்.19 அன்று 355 சிறப்புப் பேருந்துகளும், செப்.20 அன்று 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!