News October 24, 2024

விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம்!

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில், பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஆய்வுக்காக வரும்போது, குப்பை சேகரிப்பாளர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் காண்பிக்க வேண்டும். உரிய விதிகளைப் பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 15, 2025

சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

image

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18ம் தேதி 5 மண்டலங்களில் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)

News August 15, 2025

ரிப்பன் மாளிகையில் கொடியேற்றிய மேயர்

image

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா இன்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

News August 15, 2025

FLASH: சென்னையில் 50 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் பலி!

image

சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணியின் போது இன்று (ஆகஸ்ட் 15) ராட்சத கிரேனில் கான்கிரீட் பாக்ஸ் இணைப்பை தூக்கி சென்றுள்ளனர். அப்போது கிரேனின் கம்பி அறுத்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஜார்கண்டை சேர்ந்த பிக்கிகுமார் பஸ்வான் (23) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்தோஷ் லோரா (23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!