News January 16, 2025

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்

image

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள், விமானம் மூலம் நேற்று (ஜன.15) இரவு சென்னை விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், விடுவிக்கப்பட்ட மீனவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News

News August 4, 2025

செங்கல்பட்டில் தீய சக்திகளில் இருந்து காக்கும் சேப்பாட்டி அம்மன்

image

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் அமைந்துள்ளது சேப்பாட்டி அம்மன் கோயில். இந்தக் கோயில் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பக்தர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். நிகழும் ஆடி மாதத்தில் ஒரு முறை சென்று வாருங்கள். ஷேர்!

News July 11, 2025

மன அமைதியை கொடுக்கும் செங்கண்மாலீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூருக்கு 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவராக செங்கண்மாலீஸ்வரர் உள்ளார். இக்கோயில் 3 ஆம் நூற்றாண்டில் முற்கால சோழப் பேரரசர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்று, மன அமைதியைப் பெற இக்கோயில் ஒரு சிறந்த இடமாகும். மன அழுத்தம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!