News April 7, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க குழு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதை செயல்படுத்துகிறதா என உறுதி செய்வதற்காக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி, துணை ஆய்வாளர் சுப்ரமணியம் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 9, 2026
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மலையேறிய பக்தர் ஹரிதாஸ், மூச்சு திணறல் காரணமாக நேற்று உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
News March 9, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


