News March 27, 2024
விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி மோகனா நேற்று 26 ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
ஆம்பூர்: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியை சேர்ந்தவர் முகமது மாஸ். இவர் இன்று (அக்.28) தனது பைக்கில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது அய்யனூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் முகமது மாஸிற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் உடனடியாக அவரை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News October 28, 2025
திருப்பத்தூர்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

திருப்பத்தூர் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
News October 28, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், மக்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி “நனைந்த கைகளால் மின்சார சாதனங்களை தொடாதீர்கள். குழந்தைகளை மின்சார சாதனங்களின் அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம்”. பின் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


