News November 22, 2025
விஜய் நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி

விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
13 பேரை சுடும்போது EPS நேரில் சென்றாரா? KAS

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்க விஜய் நேரில் செல்லவில்லை என EPS வைத்த விமர்சனத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், 13 பேரை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது, அப்போதைய CM EPS நேரில் சென்றாரா என KAS கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஒரு அதிமுக அமைச்சர்கூட நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் சாடியுள்ளார்.
News January 31, 2026
பெரும் கஷ்டத்தை போக்கும் அற்புத மூலிகை

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்னை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News January 31, 2026
குப்பை வண்டியில் உணவா..: அண்ணாமலை

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது அதை வழங்காமல், உணவு வழங்குவதாக கூறி CM ஸ்டாலின் விளம்பர நாடகம் நடத்தினார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக குப்பை வண்டியில் உணவு கொடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த தரமற்ற உணவைக் கூட வெகுநேரம் காக்க வைத்தே திமுக அரசு வழங்குகிறது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை CM காயப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.


