News December 13, 2025
விஜய்யை விசாரிக்க CBI திட்டம்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் CBI அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே தவெக முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார், மதியழகனிடம் கரூரில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, கரூருக்கு பதிலாக சென்னையில் வைத்தே விஜய்யிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.
Similar News
News April 1, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹3,040 உயர்வு!

மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹380 உயர்ந்து ₹14,050-க்கும், சவரனுக்கு ₹3,040 அதிகரித்து ₹1,12,400-க்கும் விற்பனையாகிறது. <<19529289>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 2% உயர்ந்துள்ளதன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தடாலடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
News April 1, 2026
ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான ரெக்கார்டு!

IPL-ல் ஒரு ஓவரில் அதிக பந்துவீசிய பவுலர் என்ற மோசமான ரெக்கார்டை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். GT-க்கு எதிரான மேட்ச்சில் 4 வைட், 1 நோ பால் உள்பட அவர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசினார். ஏற்கெனவே, RCB சிராஜ் (vs MI, 2023) CSK துஷார் தேஷ்பாண்டே(vs LSG, 2023), LSG ஷர்துல் தாக்கூர் (vs KKR, 2025), RR சந்தீப் சர்மா (vs DC, 2025), MI ஹர்திக் (vs GT, 2025) ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர்.
News April 1, 2026
₹200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்

தமிழகத்திலுள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 3% – 5% வரை கட்டணம் உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கார், ஜீப்களுக்கான சுங்கக் கட்டணம் ₹10 வரையிலும், பஸ்கள் & கனரக வாகனங்களுக்கான கட்டணம் ₹40 – ₹200 வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


