News January 12, 2026
விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
சிக்கன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விலை குறைந்தது

சண்டே வரை வெயிட் பண்ண வேண்டாம், இன்னைக்கே சிக்கன் எடுத்துற வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஹேப்பி நியூஸ். இன்று கறிக்கோழி 1 கிலோ ₹120-லிருந்து ₹5 குறைந்து ₹115 ஆக விற்பனையாகிறது. அதேநேரம், முட்டைக்கோழி விலை ₹72 ஆகவே நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையும் ₹5.25 ஆக உள்ளதால், சிக்கன் பிரியர்கள் இன்று ஹேப்பியாக வாங்கி சாப்பிடுங்கள்.
News February 4, 2026
ஷாருக், சல்மான் போல் ஆவேன்: லெஜண்ட் சரவணன்

தான் ஒருநாள் ஷாருக்கான், சல்மான் கான் போல ஆவேன் என்று சிறுவயதிலேயே தனது தாயிடம் கூறியதாக லெஜண்ட் சரவணன் பேசியுள்ளார். தன்னுடைய ‘லீடர்’ பட விழாவில் பேசிய அவர், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் சில காரணங்களால் எனது தந்தையின் தொழிலைக் கவனிக்க வேண்டியதாகிவிட்டது. மேலும், ஜவுளி, சினிமா எதுவானாலும் 100% உழைப்பை கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
BREAKING: அரசு அறிவித்தது.. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி

TN-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ல் 53,022 ஆக இருந்த பாதிப்பு, கடந்தாண்டில் அது இரு மடங்காக(1,00,097) அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,505, காஞ்சியில் 7,295, வேலூரில் 6,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


