News December 10, 2025
விஜய்க்கு சரியாக சொல்லி கொடுக்கவில்லை: நமச்சிவாயம்

புதுச்சேரியில் நேற்றைய மக்கள் சந்திப்பின் போது, அங்கு ரேஷன் கடைகளே இல்லை என விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு, 2016-ல் தற்காலிகமாக மூடப்பட்ட ரேஷன் கடைகள், 2024 முதல் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்க்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
உழைத்தவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா தமிழிசை?

உழைத்தவர்களுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடுவதாக பாஜகவினர் சிலர் விமர்சித்தது குறித்து தமிழிசை பதிலளித்துள்ளார். அவர்களின் ஆதங்கம் புரிகிறது என்ற அவர், ஆனால் தன்னுடைய டாக்டர் பணியை துறந்து, பாஜகவுக்காக 27 ஆண்டுகள் உழைத்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தலைமை தனக்கு உரிய பதவிகளை வழங்கியது எனவும், தான் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News April 7, 2026
துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
நடிகை சாஷ்வி பாலா மரணம்.. குவியும் அஞ்சலி

சென்னையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ‘கயல்’ சீரியல் நடிகை சாஷ்வி பாலா (எ) <<19578782>>சுபாஷினிக்கு<<>> அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போரூர் போலீசார் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சற்றுமுன் RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


