News December 28, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் உதயநிதி உருக்கம்

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாஜக நிர்வாகிகள் முதலில் அஞ்சலி செலுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 30, 2025
தவெக நிர்வாகிகளிடம் CBI கேட்டது என்ன?

கரூர் சம்பவம் தொடர்பாக <<18710271>>2-வது நாளாக<<>> TVK நிர்வாகிகளை CBI விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, விஜய் வருகையில் தாமதம் இருந்ததா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? கூடுதலாக எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தார்கள்? TVK பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளை பல கேட்டதாக கூறப்படுகிறது.
News December 30, 2025
நந்தினி தற்கொலை.. கலங்க வைக்கும் கடைசி நிமிடம்

கெளரி சீரியல் நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெருந்துயரமே, அவரது இறப்புக்கு முன்பு நடித்த காட்சி தான். ஏனென்றால், தற்கொலைக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில், தற்கொலை செய்யும் காட்சியே படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரீலுக்காக நடித்த நந்தினி, ரியலாகவே தற்கொலை செய்தது கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#RIP<<>>
News December 30, 2025
பெருமாள் முகத்தில் ஏன் வடுக்கள் உள்ளது தெரியுமா?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில், வடுக்கள் இருப்பதன் காரணம் தெரியுமா? இங்கு பெருமாள் பார்த்தசாரதி (அர்ஜுனனின் சாரதி) ரூபத்தில் உள்ளார். மகாபாரதப் போரில், பீஷ்மர் விடுத்த அம்புகள் கண்ணன் மீது பட்டதாகவும், அதன் வடுக்களே பெருமாளின் முகத்தில் தெரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த வடுக்களை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில் மட்டுமே காணமுடியும். இத்தகவலை பகிருங்கள்.


