News December 19, 2024

விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்த CM

image

ஈரோடு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டுக்கடையில் உள்ள தறிப்பட்டறையில் தொழிலாளர்களுடன் உரையாடினார். விசைத்தறி கூடங்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது பயனுள்ளதாக உள்ளதா எனக் கேட்டறிந்தார். அப்போது மின் கட்டண கணக்கெடுப்பை மாதம் ஒரு முறை மேற்கொள்ளுமாறு விசைத்தறியாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததற்கு, அது ஒரு மின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

Similar News

News March 6, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

image

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 6, 2026

சட்டமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

News March 5, 2026

ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!