News August 11, 2024
விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 20.10.25 பரவலாக பல பகுதியில் மழை பெய்தது, அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானிலை மையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கவும். மேலும் வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உங்கள் பகுதியில் மழை இருக்கா கமெண்ட் பண்ணுங்க.
News October 21, 2025
கள்ளக்குறிச்சி: மதுபான கடை முன்பு கைகலப்பு

சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு அரசு மதுபான கடையில் நேற்று பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக்கொண்டனர். மதுபான கடை அருகே ஒருவருக்கு ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன், அவர்களிடம் விசாரணை செய்தனர். பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
News October 20, 2025
கள்ளக்குறிச்சி: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <