News February 7, 2026
விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்; விக்கிரவாண்டி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவருக்கும் மனைவி சுபாஷினிக்கும்(34) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ராஜா, வீட்டின் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் அண்ணன் அர்ச்சுணன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 9, 2026
விழுப்புரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை மிகவும் அதிகரித்து வருகிறது. இவை, சாலைகளைக் கடக்கும் பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளை துரட்டிக் கடிக்கப் பாய்கின்றன. ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News February 9, 2026
விழுப்புரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், விழுப்புரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
திண்டிவனம் அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு கவுசல்யா(33) என்ற மனைவியும், 11 வயதில் ஓர் மகனும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த குப்பையை கொட்டுவதற்கு, கவுசல்யா வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.


