News March 13, 2026
விக்கிரவாண்டி அருகே துடிதுடித்து பலி!

நெய்வேலியைச் சேர்ந்தவர் மோகன்(20). இவர், விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரும், இவரது நண்பர் சரத்(20) என்பவரும் பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றனர். பைக்கை சரத் ஓட்டினார். அப்போது, முண்டியம்பாக்கம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், இவர்களது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 5, 2026
விழுப்புரம்: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

விழுப்புரம் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04146-229884 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News April 5, 2026
விழுப்புரம்: GAS-க்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News April 5, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


