News September 12, 2024

விஐபிகளை அழைக்க முன் அனுமதி அவசியம்-சிஇஓ உத்தரவு

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கூறியதாவது; பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வெளி நபர்களை அழைப்பதற்கு முன், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரின் முன் அனுமதி பெறுவது அவசியம். முன் அனுமதி இல்லாமல் வெளி நபர்களை நிகழ்ச்சிகளுக்கு பேச அழைக்கக்கூடாது. இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.

Similar News

News July 4, 2025

நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நாளை ஜூலை 5ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். *ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!