News August 6, 2024
வாவுபலி பொருட்காட்சியில் போலி பாஸ்

குழித்துறையில் நடக்கும் வாவுபலி பொருட்காட்சி திடலில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும். இதில் விஐபி-கள், அரசு அதிகாரிகளுக்கு இலவச பாஸ் ஒப்பந்ததாரர் மூலம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு கும்பல் விஐபி பாஸ் போன்று போலி அட்டை தயாரித்து ரூ.200-க்கு மக்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
குமரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 18, 2025
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

திருவனந்தபுரம் கல்லடச்சான்மூலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(69). இவர் கடந்த டிச.6.ம் தேதி பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு கொல்லங்கோடு வழியாக வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 18, 2025
குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


