News November 29, 2024
வாழையில் இலை புள்ளி நோயை கட்டுப்படுத்த டிப்ஸ்!

களக்காடு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சண்முகநாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், களக்காடு வட்டாரத்தில் 3000 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகரிக்கும்போது இலை புள்ளி நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்கக் கன்றுகளை அகற்றுதல், தோட்டத்தில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் ஈரப்பதத்தை குறைக்கும் என்றனர்.
Similar News
News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.
News August 20, 2025
நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <