News January 14, 2026
வாழப்பாடி அருகே பயங்கர விபத்து: 2 பெண்கள் பலி!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
சேலம்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க<
News February 4, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

சேலம் கிச்சிபாளையம் காவல் நிலைய குற்றவழக்கில் தொடர்புடைய ஸ்ரீதேவி (48), செண்பகவடிவு (51) ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, சேலம் நீதிமன்ற நடுவர் எண் 1-ல் நேற்று நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. அப்போது நீதிபதியை ஒருமையில் பேசி அவமதித்ததோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட அஸ்தம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 4, 2026
உங்கள் கருத்து சேலத்தின் எதிர்காலம்: கலெக்டர் அழைப்பு

சேலம் மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ‘தொலைநோக்கு 2030’ திட்டக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் 05.02.2026 அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.


