News December 19, 2025
வாழப்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, இவர் தனது விளைநிலத்தில் குழி தோண்டிய போது, பழங்காலத்து கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, 9ம் நூற்றாண்டில் ஆத்தூர் பகுதியில் ஆட்சி செய்த இராமாடிகள் என்னும் குறுநில மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடுகல் என தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வரலாற்றை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 21, 2025
சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 21, 2025
சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி!

சேலம் ஜான்சன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன், 53. இவர் டூவீலரில் ராஜா நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தாமரைச்செல்வன் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 21, 2025
பெண்களே ஆபத்தா? 181 அழையுங்கள்!

ம்: சேலம் மாவட்ட காவல்துறையின் சட்ட ஒழுங்குப் பிரிவு சார்பில் பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது இன்னல்கள் ஏற்பட்டால், உடனடியாக உதவி பெற ‘181’ என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகக் காவல்துறை பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


