News June 6, 2024

வாலிபர் இறப்பு மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

image

விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் அருண் குமார் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

Similar News

News August 23, 2025

விழுப்புரம்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கண்டமங்கலம் வட்டாரத்தில் வருகின்ற 23-08-2025 நாளைக்கு சனிக்கிழமை அன்று ஐ.எப்.இ.டி. (IFET) பொறியியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் காலை 9-00 மணிமுதல் மாலை 4-00 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கபடும்.

News August 22, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

விழுப்புரத்தில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

error: Content is protected !!