News June 1, 2024
வார சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் இன்று வார சந்தை நடைபெற்றது. இந்த நிலையில் நகராட்சி அலுவலர்கள் வார சந்தையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதித்து அங்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News August 21, 2025
திருச்சி: அரசு வேலைக்கு இலவச பயிற்சி – கலெக்டர்

திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 42 உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஆக.22) முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News August 21, 2025
திருச்சி: இலவச பயிற்சி- கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக.,22-ம் தேதி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News August 21, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (ஆக.21) ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரி, பாலக்கரை மரக்கடை வாட்டர் டேங்க், துறையூர் செங்குந்தர் ஆரம்ப பள்ளி, கண்ணுடையான்பட்டி சமுதாய கூடம், லால்குடி அய்யனார் கோவில், வையம்வட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.