News February 1, 2025
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் தாம்பரம்- கோவை ரயில் வரும் பிப்.28- ஆம் தேதி வரையும், கோவை- தாம்பரம் சிறப்பு ரயில் வரும் மார்ச் 02- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
ஏற்காட்டில் தீவிர சோதனை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீயைத் தடுக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்சேர்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
தலைவாசல் அருகே பயங்கர விபத்து: குழந்தை பலி

பெரம்பலூர் சேர்ந்த அரவிந்த், திருமண நிகழ்வை முடித்துவிட்டு குடும்பத்துடன் காரில் ஊர் திரும்பியபோது,தலைவாசல் அருகே வீரகனூரில் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கவிழ்ந்து தம்பதி மற்றும் அவர்களது 4 வயது மகன் அமிழ்தமொழியன் படுகாயமடைந்தனர்.சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிறுவன் நேற்று உயிரிழந்தான்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
News March 8, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (மார்.07) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


