News September 10, 2025

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

image

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இதில் 22 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து மனுக்களை அளித்தனர். மனுதாரர்களின் புகார்களை கேட்டுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Similar News

News September 11, 2025

அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம், அல்லது 100ஐ அழைக்கவும் என தெரியவிக்கப்பட்டது.

News September 10, 2025

அரியலூர்: வங்கி பணம் காணாமல் போகிறதா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே <<>>கிளிக் செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

அரியலூர் வருகைதந்த சிறுபான்மை ஆணையக் குழு தலைவர்

image

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் மற்றும் துணைத் தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று (10/09/2025) அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

error: Content is protected !!